search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனியின் ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தாமஸ் ஸ்கிபெர் தற்கொலை
    X
    ஜெர்மனியின் ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தாமஸ் ஸ்கிபெர் தற்கொலை

    கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் மாநில நிதி மந்திரி தற்கொலை

    கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை செய்து கொண்டார்.
    கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து விட்டது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் கொத்துகொத்தாக மனித உயிர்கள் மடிந்து கொண்டிருக்கின்றன.

    இதற்கிடையில் பொருளாதாரம் படும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மறுபக்கம் பொருளாதாரம் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எந்த வகையில் உதவலாம் என நிதி அமைச்சகங்கள் சிந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநிலத்தின் நிதி மந்திரி் தாமஸ் ஸ்கிபெர் கடந்த சில நாட்களாக இந்த சிக்கலை போக்க உழைத்துக் கொண்டிருந்தார்.

    ஆனால் பொருளாதாரம் படும் வீழ்ச்சியடைந்துள்ளதால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் ரெயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது.

    ‘‘தாமஸ் ஸ்கிபெர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எங்களால் இதை நம்ப முடியவில்லை. நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். பொருளாதாரம் குறித்து அவர் மிகவும் கவலை அடைந்தார் என்பதை இன்று எங்களால் ஊகிக்க முடிகிறது. தற்போது இக்கட்டான நிலை. இந்த நேரத்தில் அவரை போன்ற ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டிருப்பார்’’ என மாநில முதல்வர் வால்கர் பவ்ஃபியர் தெரிவித்துள்ளார்.

    தாமஸ் ஸ்கிபெர் கடந்த 10 ஆண்டுகளாக நிதி மந்திரியாக இருந்துள்ளார்.
    Next Story
    ×