search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்
    X
    முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்

    பாகிஸ்தான் - கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது

    காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரசால் பாகிஸ்தானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் 
    கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் அண்டை நாட்டின் எல்லைகளை மூடியுள்ளது.

    இந்நிலையில், காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரசால் பாகிஸ்தானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 1500-ஐ தாண்டியுள்ளது.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்தான் அதிக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் சிந்த் பகுதியில் 469 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×