search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்
    X
    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்

    ஒரே நாளில் 889 பேர் - 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி

    இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
    ரோம்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.

    உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

    தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரத்து 929 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 30 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் 92 ஆயிரத்து 472 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 889 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×