search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் அரசுப்படைகள் (கோப்பு படம்)
    X
    ஆப்கானிஸ்தான் அரசுப்படைகள் (கோப்பு படம்)

    ஆப்கானிஸ்தானில் அரசு படையினர்- பயங்கரவாதிகள் மோதல்: 7 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டாலும் ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் கபிசா மாகாணம் நஜ்ரப் மாவட்டத்தில் உள்ள அரசுப்படையினரின் சோதனைச்சாவடியை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அரசுப்படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

    இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அரசுப் படையினர் 4 பேர், பயங்கரவாதிகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசுப்படையை சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்தார்.
    Next Story
    ×