என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
Byமாலை மலர்19 March 2020 11:05 PM GMT (Updated: 19 March 2020 11:05 PM GMT)
நியூசிலாந்தில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்பட்டு வந்த கருக்கலைப்பு குற்றம், தற்போது குற்றம் அல்ல என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
வெலிங்டன்:
நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது.
இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.
இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 68 ஓட்டுகளும், எதிராக 51 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் மசோதா நிறைவேறியது.
முதலில் இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த நியூசிலாந்து அரசு முடிவு செய்தது. பின்னர் அந்த முடிவை கைவிட்டது.
இப்போது கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று ஆக்கப்படுவதால், ஒரு சுகாதார பிரச்சினையாக மட்டுமே கருதப்படும் என நியூசிலாந்து நீதித்துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்படுகிற ஒரே மருத்துவ முறை கருக்கலைப்பு என்று இருந்து வந்தது. இப்போது அது குற்றம் என்ற நிலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
இனி நியூசிலாந்தில் பெண்கள் 20 வாரங்கள்வரை கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை.
நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது.
இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.
இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 68 ஓட்டுகளும், எதிராக 51 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் மசோதா நிறைவேறியது.
முதலில் இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த நியூசிலாந்து அரசு முடிவு செய்தது. பின்னர் அந்த முடிவை கைவிட்டது.
இப்போது கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று ஆக்கப்படுவதால், ஒரு சுகாதார பிரச்சினையாக மட்டுமே கருதப்படும் என நியூசிலாந்து நீதித்துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்படுகிற ஒரே மருத்துவ முறை கருக்கலைப்பு என்று இருந்து வந்தது. இப்போது அது குற்றம் என்ற நிலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
இனி நியூசிலாந்தில் பெண்கள் 20 வாரங்கள்வரை கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X