என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ்: அமெரிக்க மக்களுக்கு விரைவில் நற்செய்தி - டிரம்ப் அதிரடி டுவீட்
Byமாலை மலர்18 March 2020 12:12 PM GMT (Updated: 18 March 2020 12:12 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்றை மீண்டும் சீன வைரஸ் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் மக்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்:
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்டின் தலைவர்கள் டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள மூன்று பதிவுகளில், ‘மிக முக்கியமான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் ஓட்டல்கள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி இருப்பவர்களுக்கு விரைவில் பணம் வந்து சேரும். சீன வைரசின் கடுமையான தாக்குதல் உங்கள் பிழையல்ல; முன்பிருந்ததை விட பலமாக இருப்போம்.
உங்களது சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு அரணாக இருப்பேன். இந்த சீன வைரஸ் தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் இருந்துவந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்திப்பேன்.
மற்றவர்களின் விருப்பத்துக்கு எதிராக சீனா நாட்டு எல்லைக்களை மூடியது உள்பட இந்த சீன வைரஸ் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறேன். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் மாகாணம் என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் கடந்த வாரம் டுவிட்டரில் பதிவு செய்தார்.
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்டின் தலைவர்கள் டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத டிரம்ப் இன்றும் தனது டுவிட்டர் பதிவில் " சீன வைரஸ் "என்றே குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள மூன்று பதிவுகளில், ‘மிக முக்கியமான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் ஓட்டல்கள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி இருப்பவர்களுக்கு விரைவில் பணம் வந்து சேரும். சீன வைரசின் கடுமையான தாக்குதல் உங்கள் பிழையல்ல; முன்பிருந்ததை விட பலமாக இருப்போம்.
உங்களது சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு அரணாக இருப்பேன். இந்த சீன வைரஸ் தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் இருந்துவந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்திப்பேன்.
மற்றவர்களின் விருப்பத்துக்கு எதிராக சீனா நாட்டு எல்லைக்களை மூடியது உள்பட இந்த சீன வைரஸ் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறேன். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X