என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
Byமாலை மலர்14 March 2020 3:24 PM GMT (Updated: 14 March 2020 3:24 PM GMT)
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி சார்க் கூட்டமைப்பு தலைவர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதிலளித்துள்ளார். அதில், சார்க் நாடுகளின் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக, சகோதரத்துவ நாடு என்ற வகையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு எடுத்து வருகிறது. வீணான வதந்திகளை கேட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X