என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்சில் ஹெலிகாப்டர் விபத்து- காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயம்
Byமாலை மலர்5 March 2020 5:49 AM GMT (Updated: 5 March 2020 5:49 AM GMT)
பிலிப்பைன்சில் காவல்துறையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த போலீசார் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள போலீஸ் மைதானத்தில் இருந்து இன்று காலை காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அதிகாரிகள் புறப்பட்டனர். காவல்துறை தலைவர் ஜெனரல் ஆர்ச்சி கம்போவா, 4 அதிகாரிகள் மற்றும் 2 பைலட்டுகள் என 7 பேர் அதில் பயணித்தனர்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனால் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்த ஹெலிகாப்டர், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து நொறுங்கியது.
இதில், ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மயக்கமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X