என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி
Byமாலை மலர்29 Feb 2020 8:26 PM GMT (Updated: 29 Feb 2020 8:26 PM GMT)
பாகிஸ்தானின் காகித தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமடைந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் பாய்லர் வெடித்து இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எனினும் சரியான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமடைந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் பாய்லர் வெடித்து இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எனினும் சரியான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X