search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ்

    அமெரிக்காவை தொடர்ந்து அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    மெக்சிகோ சிட்டி: 
     
    சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு மட்டுமின்றி உலகின் 40-க்கும் அதிகமான நாடுகளுக்கும் பரவி மக்களுக்கு கடுமையான அச்சத்தை உருவாக்கிவருகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 2788 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 78 ஆயிரத்து 824 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் மொத்தம் 2865 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உலகம் முழுவதும் மொத்தம் 83 ஆயிரத்து 670 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து சொந்த நாடான மெக்சிகோ வந்த இரண்டு ஆண் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   
    Next Story
    ×