என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 17 பேர் பலி
Byமாலை மலர்27 Feb 2020 11:12 PM GMT (Updated: 27 Feb 2020 11:12 PM GMT)
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
ரோம்:
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 30-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 650 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X