search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிப்படைந்த நோயாளியை கண்காணிக்கும் மருத்துவர்
    X
    பாதிப்படைந்த நோயாளியை கண்காணிக்கும் மருத்துவர்

    கொரோனா வைரஸ் - பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி

    கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது.
    பாரிஸ்:

    சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அந்நாட்டை சேர்ந்த 60 வயதுடைய பெரியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரான்சை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

    மேலும், பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது. 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
    Next Story
    ×