என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் - பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி
Byமாலை மலர்26 Feb 2020 10:41 AM GMT (Updated: 26 Feb 2020 10:41 AM GMT)
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது.
பாரிஸ்:
சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அந்நாட்டை சேர்ந்த 60 வயதுடைய பெரியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரான்சை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும், பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது. 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X