என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடகை தாய் மூலம் பிறந்த உலகின் முதல் சிறுத்தை குட்டிகள்
Byமாலை மலர்25 Feb 2020 10:02 AM GMT (Updated: 25 Feb 2020 10:02 AM GMT)
உலகில் முதல் முறையாக அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில், வாடகைத் தாய் மூலமாக சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:
செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பிறப்பது தற்போதைய நாகரீக உலகில் சாத்தியமானது. குழந்தைப் பேறு இல்லாத எத்தனையோ தம்பதிகள் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் மூலம் பலன் அடைந்துள்ளனர். அதே போல் கருவுற இயலாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் முறையும் உள்ளது.
ஆனால் உலகில் முதன்முறையாக விலங்குகளில் இவ்வகை கருத்தரித்தல் மருத்துவ முறையை உபயோகித்து சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டெலாவேர் கவுண்டியில் உள்ளது கொலம்பஸ் உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் கிபிபி என்ற 6 வயது சிறுத்தை உள்ளது. ஒரு சில மருத்துவ காரணங்களால் கிபிபி தாய்மை அடைய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிபிபியின் சினை முட்டைகளை பிரித்து, ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து அதை இஸ்ஸி என்ற 3 வயது சிறுத்தையின் கருப்பைக்குள் ஆய்வாளர்கள் செலுத்தினர்.
இந்நிலையில், இஸ்ஸி சிறுத்தை இரண்டு குட்டிகளை ஈன்றதாக கொலம்பஸ் உயிரியியல் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரியியல் பூங்காவின் விலங்கு சுகாதார துணைத் தலைவர் டாக்டர் ராண்டி ஜங்கே கூறுகையில், ‘இஸ்ஸி சிறுத்தை, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிறுத்தை குட்டியை ஈன்றது. இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் உயிரினங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆய்வாளர்கள் இந்த சோதனை முயற்சியை மூன்று முறை செயல்படுத்தியுள்ளனர். முதல் இரண்டு முறை வெற்றி கிட்டாத நிலையில் இம்முறை பலன் கிடைத்துள்ளது’, என தெரிவித்தார்.
சிறுத்தைகளின் கர்ப்ப காலம் 90 முதல் 95 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X