என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்... வருகிறது புதிய சட்டம்
Byமாலை மலர்24 Feb 2020 7:15 AM GMT (Updated: 24 Feb 2020 7:15 AM GMT)
அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களையும், ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களையும் திருமணம் செய்து கொள்ள வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியூயார்க்:
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை நாம் பின்பற்றினாலும், பல்வேறு நாடுகளில் அதுபோன்ற நடைமுறை இல்லை. ஆண் பல பெண்களையயும், பெண் பல ஆண்களையும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு நிபந்தனை... திருமண உறவுகளில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மற்றவர்களை திருமணம் செய்துகொள்ள முடியும்.
பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணைக்கு தெரியாமல் செய்துகொள்ளும் திருமணங்கள் குற்றமாக கருதப்படும். பல திருமணங்கள் செய்வது, போக்குவரத்து விதி மீறல் போன்ற சிறிய குற்றமாகவே கருதப்படும். இந்த குற்றத்திற்கு பெரிய அளவில் தண்டனை கிடையாது. 750 டாலர் அபராதம் மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனை வழங்க இந்த புதிய சட்டம் வகை செய்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பலரையும் திருமணம் செய்து கொண்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதை மாற்றி, நிபந்தனையுடன் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அது சட்டமாகும். பிரதிநிதிகள் சபையில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை நாம் பின்பற்றினாலும், பல்வேறு நாடுகளில் அதுபோன்ற நடைமுறை இல்லை. ஆண் பல பெண்களையயும், பெண் பல ஆண்களையும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு நிபந்தனை... திருமண உறவுகளில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மற்றவர்களை திருமணம் செய்துகொள்ள முடியும்.
பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணைக்கு தெரியாமல் செய்துகொள்ளும் திருமணங்கள் குற்றமாக கருதப்படும். பல திருமணங்கள் செய்வது, போக்குவரத்து விதி மீறல் போன்ற சிறிய குற்றமாகவே கருதப்படும். இந்த குற்றத்திற்கு பெரிய அளவில் தண்டனை கிடையாது. 750 டாலர் அபராதம் மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனை வழங்க இந்த புதிய சட்டம் வகை செய்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பலரையும் திருமணம் செய்து கொண்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதை மாற்றி, நிபந்தனையுடன் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அது சட்டமாகும். பிரதிநிதிகள் சபையில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X