என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழா ரத்து
Byமாலை மலர்24 Feb 2020 6:26 AM GMT (Updated: 24 Feb 2020 6:26 AM GMT)
கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழாவையொட்டி மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஜப்பான்:
சீனாவைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் என 28 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.
ஜப்பானிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் மன்னர் நருஹிட்டோவுக்கு நேற்று 60-வது பிறந்த நாள் ஆகும்.
வழக்கமாக மன்னரின் பிறந்த நாள் விழா ஜப்பான் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டும். மன்னரின் அரண்மனைக்கு அருகில் ஏராளமானோர் திரண்டு நின்று வாழ்த்து தெரிவிப்பார்கள். கொரோனா பீதி காரணமாக நேற்று மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எளிமையாகவே நடந்தன. அரண்மனை அருகே மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
சீனாவைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் என 28 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.
ஜப்பானிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் மன்னர் நருஹிட்டோவுக்கு நேற்று 60-வது பிறந்த நாள் ஆகும்.
வழக்கமாக மன்னரின் பிறந்த நாள் விழா ஜப்பான் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டும். மன்னரின் அரண்மனைக்கு அருகில் ஏராளமானோர் திரண்டு நின்று வாழ்த்து தெரிவிப்பார்கள். கொரோனா பீதி காரணமாக நேற்று மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எளிமையாகவே நடந்தன. அரண்மனை அருகே மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X