என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனா வைரஸ் பீதி- பிளாஸ்டிக் கவரால் உடலை மூடி பயணித்த விமான பயணிகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பாதுகாப்புக்காக முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பீதியால் விமான பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து பெண் பயணி ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெண் பயணி ஒருவர் ‘பிங்க்’ நிற பிளாஸ்டிக் உடையை கை, கால், உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரது அருகில் ஆண் பயணி ஒருவர் தன்னுடைய உடல் முழுவதும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பயணிகளின் நடவடிக்கைக்கு ஆதரவாக சிலர் கருத்து பதிவிடுகின்றனர். சிலர் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்