என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்தவுடன் டாக்டரை முறைத்து பார்த்த குழந்தை - இணையத்தில் வைரலாகும் படம்
Byமாலை மலர்23 Feb 2020 7:16 PM GMT (Updated: 23 Feb 2020 7:16 PM GMT)
குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசிலியா:
உலகில் மிக பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழவே செய்கின்றன. மிகவும் அரிதாக புன்னகை பூக்கும் குழந்தைகளும் உண்டு. அதே சமயம் சில குழந்தைகள் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இன்றி இருக்கும். அந்த சமயத்தில் டாக்டர்கள் எதையாவது செய்து, குழந்தையை அழ வைப்பார்கள்.
இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டயானே டிஜீசஸ் பார்போசா என்ற பெண்ணுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்த குழந்தை அழாமல் இருந்தது.
எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை சோதிப்பதற்காக டாக்டர்கள் குழந்தையை அழ வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த குழந்தை அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்தது.
பின்னர் டாக்டர் குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்தவுடன் குழந்தை ‘வீல்’ என்று அழுது இயல்பு நிலைக்கு திரும்பியது.
முன்னதாக, டயானே, தனது குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக ஏற்கனவே நியமித்திருந்த தொழில்முறை புகைப்பட கலைஞர் ஒருவர் குழந்தை டாக்டரை முறைத்து பார்த்ததை துல்லியமாக படம் பிடித்தார்.
பின்னர் அவர் அதை ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் மிக பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழவே செய்கின்றன. மிகவும் அரிதாக புன்னகை பூக்கும் குழந்தைகளும் உண்டு. அதே சமயம் சில குழந்தைகள் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இன்றி இருக்கும். அந்த சமயத்தில் டாக்டர்கள் எதையாவது செய்து, குழந்தையை அழ வைப்பார்கள்.
இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டயானே டிஜீசஸ் பார்போசா என்ற பெண்ணுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்த குழந்தை அழாமல் இருந்தது.
எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை சோதிப்பதற்காக டாக்டர்கள் குழந்தையை அழ வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த குழந்தை அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்தது.
பின்னர் டாக்டர் குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்தவுடன் குழந்தை ‘வீல்’ என்று அழுது இயல்பு நிலைக்கு திரும்பியது.
முன்னதாக, டயானே, தனது குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக ஏற்கனவே நியமித்திருந்த தொழில்முறை புகைப்பட கலைஞர் ஒருவர் குழந்தை டாக்டரை முறைத்து பார்த்ததை துல்லியமாக படம் பிடித்தார்.
பின்னர் அவர் அதை ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X