என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் - 22 பேர் பலி
Byமாலை மலர்18 Feb 2020 9:24 PM GMT (Updated: 18 Feb 2020 9:24 PM GMT)
நைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியாமி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அண்டை நாடான நைஜரில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்கள் நைஜரின் தென் கிழக்கு பகுதியில் நைஜீரியா மற்றும் சாத் எல்லையோரத்தில் அமைந்துள்ள டிபா நகரில் இருக்கும் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாகாண கவர்னர் நைஜரில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று, அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து, அவரது சார்பில் அகதிகளுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களும், பணமும் வழங்கப்பட்டது.
இதை பெறுவதற்கு மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அண்டை நாடான நைஜரில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்கள் நைஜரின் தென் கிழக்கு பகுதியில் நைஜீரியா மற்றும் சாத் எல்லையோரத்தில் அமைந்துள்ள டிபா நகரில் இருக்கும் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாகாண கவர்னர் நைஜரில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று, அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து, அவரது சார்பில் அகதிகளுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களும், பணமும் வழங்கப்பட்டது.
இதை பெறுவதற்கு மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X