என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
Byமாலை மலர்18 Feb 2020 3:41 PM GMT (Updated: 18 Feb 2020 3:41 PM GMT)
பாகிஸ்தான் நாட்டின் குவட்டா நகரில் மர்ம நபர்கள் நடத்திய குண்டுவெடிப்பில் போலீஸ் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவட்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் வழியாகத்தான் சீன-பாகிஸ்தானில் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், அந்நகரில் அமைந்துள்ள ஷாரா-இ-இக்பால் என்ற பரபரப்பான சாலை பகுதியில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு போலீஸ் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X