என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 30 பேர் பலி
Byமாலை மலர்16 Feb 2020 11:30 PM GMT (Updated: 16 Feb 2020 11:30 PM GMT)
நைஜீரியாவில் 2 கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் ஒரே சமயத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
அபுஜா:
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாதிகள் அங்குள்ள கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்து, கொடூர தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் ஒரே சமயத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தினர்.
இதில் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை கதுனா மாகாணத்தில் உள்ள பகாலி என்ற கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேரை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றது நினைவுகூரத்தக்கது.
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாதிகள் அங்குள்ள கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்து, கொடூர தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் ஒரே சமயத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தினர்.
இதில் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை கதுனா மாகாணத்தில் உள்ள பகாலி என்ற கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேரை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றது நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X