search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல்
    X
    டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல்

    ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்

    ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதியானது.
    டோக்கியோ:

    ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 132 சிப்பந்திகள் உள்பட 138 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களில் 3 சிப்பந்திகளுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பின்னர் அவர்களது உடல்நிலை முன்னேறி வருகிறது.

    இந்தநிலையில் கப்பலில் மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதியானது. அவர்கள் உடனடியாக கடலோர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×