என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து- 2 பேர் பலி
Byமாலை மலர்15 Feb 2020 4:29 AM GMT (Updated: 15 Feb 2020 4:29 AM GMT)
ரஷியாவின் யமலோ-நானட்ஸ் தன்னாட்சி பிராந்தியத்தில் எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர்.
மாஸ்கோ:
ரஷியாவின் கைடன் தீபகற்பத்தில் இருந்து சபேட்டா துறைமுகம் நோக்கி, எம்ஐ8 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஹெலிகாப்டர் ஊழியர்கள் 3 பேர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர்.
சபேட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கீழே விழுந்தது. பனிபடர்ந்த பகுதியில் தலைகீழாக விழுந்ததால் ஹெலிகாப்டரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், பனியில் சிக்கியது.
மீட்புக் குழுவினர் வருவதற்குள் பைலட், துணை பைலட் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X