என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜிரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு - 21 பேர் பலி
Byமாலை மலர்13 Feb 2020 8:40 AM GMT
நைஜீரியா நாட்டில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:
ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்திருக்கும் எகிப்து, மாலி, சாட், பர்கினோ பசோ, நைஜீரியா போன்ற சில நாடுகளில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள், போலீசார் என பலர் உயிரிழந்துள்ளனர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள பகாலி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.
கடுனா மாநிலத்தின் ஃபிகா மாவட்டத்தில் உள்ள பகாலி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 100 பயங்கரவாதிகள் மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் நுழைந்தனர். பின்னர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் கிராம மக்கள் 21 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X