என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24-ம் தேதி இந்தியா வருகை - வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Byமாலை மலர்10 Feb 2020 11:38 PM GMT (Updated: 10 Feb 2020 11:38 PM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24-ம் தேதி இந்தியா வர உள்ளதாகவும், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிபர் டொனால்டு டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ ஆயுதக் கொள்முதல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வரும் அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்ப்பது மட்டுமல்லாமல் அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
டொனால்டு டிரம்பின் மனைவி மனிலா டிரம்பும் இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X