என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்6 Feb 2020 5:46 AM GMT (Updated: 6 Feb 2020 5:46 AM GMT)
துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
அங்காரா:
துருக்கி நாட்டில் தற்போது கடும்குளிர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் வான் மாகாணத்தில் உள்ள பாசெசேஹிர் மாவட்டத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ஒரு சில தன்னார்வலர்களும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கிய 8 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இரண்டாவதாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 33 வீரர்கள் உயிரிழந்ததாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
‘இரண்டாவதாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்புப்பணியாளர்கள் 33 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் எட்டு இராணுவ போலிஸ் அதிகாரிகள், அரசால் நியமிக்கப்பட்ட மூன்று கிராம காவலர்கள், மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒன்பது தன்னார்வலர்கள் அடங்குவர். பனியின் கீழ் சிக்கியுள்ள மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என துருக்கியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் மீட்புப்படை வீரர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எத்தனை பேர் காணாமல் போயிருக்கலாம் என்ற புள்ளிவிவரத்தை அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X