என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் - 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் ஹாங்காங் விமான நிறுவனம்
Byமாலை மலர்5 Feb 2020 10:00 PM GMT (Updated: 5 Feb 2020 10:00 PM GMT)
கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்த கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ள கேட்டுக்கொண்டு உள்ளது.
ஹாங்காங்:
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியது. மேலும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங், மக்காவு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.
இந்த உயிர்க்கொல்லி நோயால் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வரும் அதே வேளையில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதிலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அந்த வகையில் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அண்மையில் மீண்டு வந்த ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தமது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியது. மேலும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங், மக்காவு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.
இந்த உயிர்க்கொல்லி நோயால் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வரும் அதே வேளையில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதிலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அந்த வகையில் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அண்மையில் மீண்டு வந்த ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தமது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X