search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வுகான் சிறப்பு மருத்துவமனை
    X
    வுகான் சிறப்பு மருத்துவமனை

    கொரோனா பீதி: சீனாவில் 9 நாட்களில் உருவான சிறப்பு மருத்துவமனை

    சீனாவில் கொரோனா வைரசினால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வுகான் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி, உயிரைக் குடிக்கும் கொரோனாவால் சீனாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார அமைப்பானது  சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டது. 

    இந்நிலையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவில் சிறப்பு மருத்துவமனை ஒன்று 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

    வுகான் நகரில் கட்டப்பட்ட இரண்டு புதிய மருத்துவமனைகளில் 269,000 சதுர அடி கொண்ட கட்டிடத்தில் ஒன்று தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. சார்ஸ் வைரஸை சமாளிக்க பீஜிங்கில் 2003 இல் கட்டப்பட்ட மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டு தற்போது இந்த புதிய கட்டிடங்களுக்கான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர்.

     சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர். பொதுவாக இம்மாதிரியான மருத்துவமனைகளை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

    கட்டுமான பணியில் சீனர்கள்

    கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.மட்டுமின்றி இந்த மருத்துவமனையானது மற்ற மருத்துவமனைகளில் இருந்து பொருட்களை வரவழைத்துக் கொள்ளவும் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து ஆர்டர் செய்யவும் அனுமதிக்கப்படும்.

    1000 படுக்கைகள் கொண்ட  இந்த மருத்துவமனையில் இன்று முதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது. 

    இந்த மருத்துவமனையானது சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1,400 இராணுவ மருத்துவர்கள் மக்கள் விடுதலை இராணுவத்திலிருந்து புதிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றவிருக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சீனாவில் 650 பொதுமக்களை பலிகொண்ட சார்ஸ் வைரஸ் காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

    Next Story
    ×