search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலிபான் பயங்கரவாதிகள் (கோப்பு படம்)
    X
    தலிபான் பயங்கரவாதிகள் (கோப்பு படம்)

    ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி மீது தலிபான்கள் தாக்குதல் - 10 போலீசார் பலி

    ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

    இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப்படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

    இதனால் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பஹ்லன் மாகாணம் குவாஜா அல்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

    இதனால் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 10 போலீசார் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×