என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி
Byமாலை மலர்28 Jan 2020 11:03 AM GMT (Updated: 28 Jan 2020 11:22 AM GMT)
பாகிஸ்தானில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணியில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்:
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஷாதரா என்ற பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திரவியம் தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.
இதனால் ரசாயன திரவியங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பற்றியெறிந்த தீ தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிக்கிய 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் உள்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X