என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி
Byமாலை மலர்26 Jan 2020 6:40 PM GMT (Updated: 26 Jan 2020 6:40 PM GMT)
உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் கொண்ட விமானமான ‘போயிங் 777 எக்ஸ்’ விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானம் ‘போயிங் 777 எக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது.
அந்த நகரில் உள்ள பெயின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 4 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதன் மூலம் ‘போயிங் 777 எக்ஸ்’ விமானம் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த விமானம் அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது சேவையை தொடங்கும் எனவும், அதற்கு முன்னதாக மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 346 பேர் பலியாகினர். இதனால் போயிங் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை பெரிதும் குறைந்தது. இதனால் நெருக்கடியை சந்தித்து வந்த அந்த நிறுவனத்துக்கு இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானம் ‘போயிங் 777 எக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது.
அந்த நகரில் உள்ள பெயின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 4 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதன் மூலம் ‘போயிங் 777 எக்ஸ்’ விமானம் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த விமானம் அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது சேவையை தொடங்கும் எனவும், அதற்கு முன்னதாக மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 346 பேர் பலியாகினர். இதனால் போயிங் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை பெரிதும் குறைந்தது. இதனால் நெருக்கடியை சந்தித்து வந்த அந்த நிறுவனத்துக்கு இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X