என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூமியில் சூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள்
Byமாலை மலர்22 Jan 2020 9:46 AM GMT (Updated: 22 Jan 2020 9:46 AM GMT)
1969ம் ஆண்டில் பூமியில் விழுந்த விண்கல்லின் உள்ளே இருந்த விண்மீனின் துகள்கள் பூமியில் உள்ள திடப்பொருட்களில் மிகப்பழமையானதாக கண்டறியப்பட்டுள்ளது.
நியூயார்க்:
கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை. பால் வெளியும் மிக அடர்த்தியான விண்மீன்களின் தொகுதிதான்.
அவற்றுள் பல விண்மீன்கள் சூரியனை விட பல மடங்கு பெரியது. மிக நீண்ட தொலைவில் தூரத்திலே இருப்பதாலே நம் கண்களுக்கு வெறும் புள்ளிகள் போன்று தெரிகின்றன.
ஒரு மிக சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக திடீரென பிரகாசத்தில் பெரிதும் அதிகரிக்கும் ஒரு நட்சத்திரம், அதன் நிறையை வெளியேற்றுகிறது. இந்த நட்சத்திரம் சூப்பர்நோவா என அழைக்கப்படுகிறது. விஞ்ஞானத்தின் படி, ஸ்டார்டஸ்ட் எனும் விண்மீன் துகள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பிலிருந்து மீதமுள்ள துகள்களால் ஆனது.
விண்வெளியில் மிதக்கும் தூசி மற்றும் வாயு ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பமடையும் போது விண்மீன்கள் உருவாக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாது அறிவியலின் படி விண்மீன்கள் என்றென்றும் பிரகாசிப்பதில்லை. நம்மைப் போல, மற்ற எல்லா உயிரினங்களைப்போலவே, அவை பிறக்கின்றன, வாழ்கின்றன, பின்னர் இறக்கின்றன.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக எரியும் நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அதன் துகள்கள் விண்வெளியில் வீசப்படுகின்றன. நமது பால்வெளியில் ஆற்றல் மூலமாக இருக்கும் சூரியன் உருவாவதற்கு முன்னதாகவே விண்மீன்கள் உருவாகியிருந்தன எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பூமியில் விழுந்த விண்கல்லினுள் இருந்த விண்மீன் துகள்கள் தான் பூமியின் மிகப்பழமையான திடப்பொருள் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வானியற்பியலில், அண்டக்கதிர் (காஸ்மிக் கதிர்கள்) என்பது குறிப்பாகச் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத் துகள் ஆகும். காஸ்மிக் கதிர்கள் உற்பத்தி மூலக்கூறுகள் வான்வெளி துகள்களில் எவ்வளவு உள்ளதை என்பதை கணிப்பதன் மூலம் அவை எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில், 1969ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் விழுந்த முர்சிசன் என்ற விண்கல்லை ஆய்வு செய்த அமெரிக்கா ஆய்வாளர்கள் அதில் சூரியனுக்கும் முந்தைய துகள்கள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
அவற்றில் உள்ள துகள்கள் 4.6 முதல் 4.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை எனவும் அவற்றுள் உள்ள மற்றும் சில துகள்கள் சுமார் 5.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையது எனவும் கண்டறிந்துள்ளனர். இவை பூமியில் உள்ள திடப்பொருட்களில் மிகவும் பழமையானது எனவும் சூரியனுக்கும் முன்பு உருவானதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அறிவியலாளர்களின் கருத்துப்படி சூரியனின் வயது 4.603 பில்லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X