என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்
Byமாலை மலர்22 Jan 2020 5:41 AM GMT (Updated: 22 Jan 2020 5:41 AM GMT)
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 9 பேர் பலியானதை அடுத்து, அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்:
‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள்.
மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவும் இந்த காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் 440 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய கொரோனா வைரஸின் மூலத்தை கண்டறியுமாறு சீனா அரசை வலியுறுத்திய உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் காய்ச்சலை, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கலாமா என்பதை தீர்மானிக்க ஒரு முக்கிய அவசர குழு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சையளிப்பது என்பது குறித்த வழிகாட்டுதலையும் வெளியிட்டது.
இந்நிலையில், இந்த வைரஸ் மாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘இந்த நோய் சுவாசக்குழாய் வழியாக பரவுகிறது, மேலும் வைரஸ் மாற்றம் அடைந்து, நோய் மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. நோயின் மூலத்தையும், பரவலையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோம்’ என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் லி பின் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், வட கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X