என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ - சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆவேசம்
Byமாலை மலர்20 Jan 2020 7:37 PM GMT (Updated: 20 Jan 2020 7:37 PM GMT)
மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி இயோ பீ இன் கூறியுள்ளார்.
கோலாலம்பூர்:
சீனா பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்ததில் இருந்து தேவையற்ற குப்பைகள் கப்பல்கள் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், இதனால் மலேசியா மற்றும் வளரும் நாடுகள் அதனை தடுக்க போராடுகின்றன என்றும் அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி இயோ பீ இன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மலேசியா கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இருந்து 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை 13 முக்கிய பணக்கார நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. 150 கன்டெய்னர்களில் 43 பிரான்சிற்கும், 42 இங்கிலாந்துக்கும், 17 அமெரிக்காவுக்கும், 11 கனடாவுக்கும், 10 ஸ்பெயினுக்கும், மீதமுள்ளவை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போர்ச்சுகல், சீனா, வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்ற விரும்புவோர் ‘‘கனவு காணலாம்’’. ஆனால் கழிவுகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும். மேலும் மலேசிய துறைமுகங்களில் இன்னும் 110 கன்டெய்னர் குப்பைகள் உள்ளன. அவை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும்.
மொத்தம் உள்ள 3,737 டன் கழிவுகளை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதற்கும், 200-க்கும் மேற்பட்ட சட்டவிரோத பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகளை அடைப்பதற்கும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ‘‘எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது, நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சீனா பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்ததில் இருந்து தேவையற்ற குப்பைகள் கப்பல்கள் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், இதனால் மலேசியா மற்றும் வளரும் நாடுகள் அதனை தடுக்க போராடுகின்றன என்றும் அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி இயோ பீ இன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மலேசியா கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இருந்து 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை 13 முக்கிய பணக்கார நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. 150 கன்டெய்னர்களில் 43 பிரான்சிற்கும், 42 இங்கிலாந்துக்கும், 17 அமெரிக்காவுக்கும், 11 கனடாவுக்கும், 10 ஸ்பெயினுக்கும், மீதமுள்ளவை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போர்ச்சுகல், சீனா, வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்ற விரும்புவோர் ‘‘கனவு காணலாம்’’. ஆனால் கழிவுகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும். மேலும் மலேசிய துறைமுகங்களில் இன்னும் 110 கன்டெய்னர் குப்பைகள் உள்ளன. அவை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும்.
மொத்தம் உள்ள 3,737 டன் கழிவுகளை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதற்கும், 200-க்கும் மேற்பட்ட சட்டவிரோத பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகளை அடைப்பதற்கும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ‘‘எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது, நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X