என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து - 8 பேர் பலி
Byமாலை மலர்19 Jan 2020 7:17 PM GMT (Updated: 19 Jan 2020 7:17 PM GMT)
செக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேக்:
செக் குடியரசு நாட்டில் ஜெர்மனி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நகரம், வெஜ்பிரிட்டி. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உடல் உறுப்புகள் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் ஒரு பராமரிப்பு இல்லம் இயங்கி வந்தது.
இந்த இல்லத்தில் உள்ள ஒரு அறையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அந்த இல்லம் முழுவதும் பரவியது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். பலர் தீயில் சிக்கினர். ஒரு சிலர் மட்டும் அங்கிருந்து தப்பினர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த இயலவில்லை என்றும், 7 மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தீயணைக்கும் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
செக் குடியரசு நாட்டில் ஜெர்மனி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நகரம், வெஜ்பிரிட்டி. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உடல் உறுப்புகள் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் ஒரு பராமரிப்பு இல்லம் இயங்கி வந்தது.
இந்த இல்லத்தில் உள்ள ஒரு அறையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அந்த இல்லம் முழுவதும் பரவியது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். பலர் தீயில் சிக்கினர். ஒரு சிலர் மட்டும் அங்கிருந்து தப்பினர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த இயலவில்லை என்றும், 7 மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தீயணைக்கும் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X