என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்17 Jan 2020 8:28 PM GMT (Updated: 17 Jan 2020 8:28 PM GMT)
அரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 2010-ம் ஆண்டு பீபி (வயது 47) என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு இஸ்லாமை அவமதித்ததாக கூறப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்த அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் 2018-ம் ஆண்டு தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் (டி.எல்.பி.) என்ற கட்சித் தலைவர் காதிம் உசேன் ரிஸ்வி 3 நாள் போராட்டம் நடத்தினார். அப்போது வன்முறை நடந்ததால் காதிம் உசேன் கைது செய்யப்பட்டார்.
டி.எல்.பி. கட்சித் தலைவர் கைதை கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டு போலீசாரும் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக காதிம் உசேனின் சகோதரர் அமீர் உசேன் ரிஸ்வி, மருமகன் முகம்மது அலி உள்பட 86 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான கோர்ட்டு விசாரணை நடத்தி 86 பேருக்கும் தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X