என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தைவான் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் சாய் இங் வென் மீண்டும் வெற்றி
Byமாலை மலர்11 Jan 2020 3:39 PM GMT (Updated: 11 Jan 2020 3:39 PM GMT)
தைவானில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரான சாய் இங் வென் 2-வது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.
தைபே:
தைவான் நாட்டில் அடுத்த அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 19.3 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது.
விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதற்கிடையே, பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தைவான் நாட்டு அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய அதிபருமான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 8 மில்லியன் வாக்குகள் பெற்று 53 சதவீதம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக சீனா ஆதரவு கட்சியான கொமிந்தாங் கட்சியின் ஹான் கோயு 38 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதையடுத்து, சாய் இங் வென் விரைவில் மீண்டும் அதிபராக பதவியேற்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X