என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருபோதும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்காது - டிரம்ப்
Byமாலை மலர்10 Jan 2020 5:12 AM GMT (Updated: 10 Jan 2020 5:12 AM GMT)
பொருளாதார தடைகளினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டிடம் ஒருபோதும் அணு ஆயுதங்கள் இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் போர்ப் பதற்றங்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளும் தங்களது ராணுவத்தின் முப்படைகளையும் தயார் நிலையிலேயே வைத்துள்ளன. இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
உலகின் வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த இருநாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடைகளினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டிடம் ஒருபோதும் அணு ஆயுதங்கள் இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
‘ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அவர்கள் அதை புரிந்துகொள்கிறார்கள். அங்கு இப்போது மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. பொருளாதார தடைகளில் சிக்கியுள்ள ஈரான் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக சரிசெய்ய முடியும். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா இல்லையா என்று பார்ப்போம்’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X