search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலியா ராணுவம் தாக்குதல்
    X
    சோமாலியா ராணுவம் தாக்குதல்

    சோமாலியா - அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    சோமாலியா நாட்டின் லோயர் ஷாபெல்லே பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது. 

    உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சோமாலியாவின் லோயர் ஷாபெல்லே பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×