search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை ரப்பர் படகு மூலம் அழைத்து சென்ற காட்சி
    X
    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை ரப்பர் படகு மூலம் அழைத்து சென்ற காட்சி

    இந்தோனேசியாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

    இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மழை தொர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், ஜகார்த்தா பிராந்தியத்தில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்குடன் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். பலரைக் காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என பேரிடர் மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது.

    மழைநீர் சூழ்ந்த பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்

    ஜகார்த்தா பிராந்தியத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

    மின்விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஜகார்த்தாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தண்ணீர் சூழ்ந்ததால்  சில ரெயில் பாதைகளும், விமான நிலையங்களும் மூடப்பட்டன.

    2013க்குப் பிறகு ஜகார்த்தா பிராந்தியத்தில் மிக மோசமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×