என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி
Byமாலை மலர்2 Jan 2020 7:07 AM GMT (Updated: 2 Jan 2020 7:07 AM GMT)
இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மழை தொர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜகார்த்தா பிராந்தியத்தில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்குடன் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். பலரைக் காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என பேரிடர் மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது.
ஜகார்த்தா பிராந்தியத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஜகார்த்தாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தண்ணீர் சூழ்ந்ததால் சில ரெயில் பாதைகளும், விமான நிலையங்களும் மூடப்பட்டன.
2013க்குப் பிறகு ஜகார்த்தா பிராந்தியத்தில் மிக மோசமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X