என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர்நிறுத்தம் தொடர்பான திட்டம் ஏதுமில்லை: தலிபான்கள் அறிவிப்பு
Byமாலை மலர்30 Dec 2019 11:50 AM GMT (Updated: 30 Dec 2019 2:28 PM GMT)
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் சமாதானப் பேச்சு தொடர்பான தகவல்களை மறுத்ததுடன் போர்நிறுத்தம் தொடர்பான திட்டம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 18ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
அதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் தலையீட்டின் பேரில் உள்நாட்டுப் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே நடந்த சிலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிரந்தரமான போர்நிறுத்தத்துக்கான சமரச ஒப்பந்தம் தயாராகியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் செய்வது தொடர்பான திட்டம் ஏதுமில்லை என தலிபான்கள் இன்று வெளியிட்ட அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 18ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ரமலான் பண்டிகை காலத்தில் ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கவும், உயிர் பலிகளை தடுக்கவும், அரசுதரப்பில் 8 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தலிபான் அமைப்பினர் 3 நாட்கள் மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
அதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் தலையீட்டின் பேரில் உள்நாட்டுப் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே நடந்த சிலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிரந்தரமான போர்நிறுத்தத்துக்கான சமரச ஒப்பந்தம் தயாராகியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் செய்வது தொடர்பான திட்டம் ஏதுமில்லை என தலிபான்கள் இன்று வெளியிட்ட அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X