என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹவாய் தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்து- 6 பேரின் உடல்கள் மீட்பு
Byமாலை மலர்28 Dec 2019 4:50 AM GMT (Updated: 28 Dec 2019 4:50 AM GMT)
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திற்கு உட்பட்ட தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திற்கு உட்பட்ட கவாய் தீவில் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுற்றுலா நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களை இயக்குகின்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று கடந்த வியாழக்கிழமை மாயமானது. அதில் பைலட் மற்றும் 6 சுற்றுலா பயணிகள் இருந்தனர்.
மாயமான ஹெலிகாப்டர் கடற்பகுதியில் விழுந்திருக்கலாம் என கருதி, தேடும் பணியில் கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டது. இதேபோல் தீவின் தொலைதூரப் பகுதியிலும் தேடும் பணி நடைபெற்றது.
அப்போது, அந்த ஹெலிகாப்டர், தீவில் உள்ள ஒரு மலை உச்சியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் சிதறிக் கிடந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றொருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக 7-வது நபரின் உடலைத் தேடும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. இன்று தொடர்ந்து தேடும் பணி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X