என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகளை கொன்று குவித்தது ராணுவம்
Byமாலை மலர்24 Dec 2019 9:24 AM GMT (Updated: 24 Dec 2019 9:26 AM GMT)
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களில், 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். தலிபான்களை களையெடுக்கும் முயற்சியாக, ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 15 மாகாணங்களில் 18 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 45 பேர் காயமடைந்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.
ஆனால், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களா அல்லது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களா? என்ற விவரத்தை வெளியிடவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X