search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 24 பேர் பலி

    இந்தோனேசியாவின் பாலம்பேங் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று இரவு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. 

    பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பலியாகினர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×