search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஹோண்டுராஸ்: சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் பலி

    ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
    டெகுசிகல்பா:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஹோண்டுராஸ் நாடும் ஒன்றாக உள்ளது. அந்நாட்டில் உள்ள டெலா என்ற நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது. 

    இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட  பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் இன்று இரு தரப்பு கைதிகளுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் 18 கைதிகள்  உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட சிறைத்துறை போலீசார் கைதிகளின் மோதலை தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், காயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

    இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×