search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டை நடைபெற்ற பகுதி
    X
    தேடுதல் வேட்டை நடைபெற்ற பகுதி

    ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 கிளர்ச்சியாளர்கள் பலி

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளாக தலிபான், ஐ.எஸ். அமைப்பு , கிளர்ச்சியாளர்கள் என பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. 

    இதுபோன்ற பயங்கரவாத குழுக்கள் ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். 

    இந்த குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுப்படைகளும் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதனால் அரசுப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், அந்நாட்டின் பர்யப் மாகாணத்திற்குள்பட்ட குய்சார் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து அப்பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில், 12 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேர் கைது செய்யப்பட்டனர். 

    கிளர்ச்சிக்குழு தளபதி நிஜாமுதீன் காய்சாருக்கு எதிராக இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×