என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கோ: தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலி
Byமாலை மலர்16 Dec 2019 12:32 PM GMT (Updated: 16 Dec 2019 1:44 PM GMT)
காங்கோ நாட்டில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் பல்வேறு தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், அந்நாட்டின் ஹல்ட் உலி மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் 30-க்கும் அதிகமானோர் கடந்த சனிக்கிழமை ( டிசம்பர் 14) தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும் பணியை செய்துகொண்டிருந்தனர்.
இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு தங்கச்சுரங்கத்தின் மேற்பரப்பு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிலர் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X