என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் - துருக்கி அதிபர் எச்சரிக்கை
Byமாலை மலர்16 Dec 2019 6:49 AM GMT (Updated: 16 Dec 2019 6:49 AM GMT)
துருக்கி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் அங்கு செயல்பட்டு வரும் இரு அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் என அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்காரா:
துருக்கியின் இன்கிர்லிக் மற்றும் குரேசிக் பகுதிகளில் அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான ராணுவ தளமும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ராணுவப் படையான நேட்டோவின் ரேடார் தளமும் இயங்கி வருகிறது.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து பகுதிகள் துருக்கி மற்றும் ரஷியா கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இதையடுத்து துருக்கியும் ரஷியாவும் நட்பு பாராட்டி வந்தன. ரஷிய ராணுவ போலீசார் அப்பகுதிகளில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்தது. ஆனால் துருக்கியின் இந்த முடிவிற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தியது.
இந்நிலையில், துருக்கி மீது பொருளாதார தடைகள் விதித்தால் இன்கிர்லிக் மற்றும் குரேசிக் பகுதிகளில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் என அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X