search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து ஏற்பட்ட பகுதி
    X
    தீ விபத்து ஏற்பட்ட பகுதி

    ரஷியா: குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

    ரஷிய நாட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
    மாஸ்கோ:

    ரஷிய நாட்டின் அல்டாய் மாகாணத்திற்கு உள்பட்ட குல்பொகொய் பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. இதற்கிடையில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் குழந்தைகள் உள்பட 6 பேர் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், அந்த குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    ஆனால், இந்த தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த குடியிருப்புக்குள் அடைத்து வைக்கப்பட்டு மர்ம நபர்களால் கொடுமைபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×