என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியா: குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி
Byமாலை மலர்13 Dec 2019 4:47 PM GMT (Updated: 13 Dec 2019 4:47 PM GMT)
ரஷிய நாட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:
ரஷிய நாட்டின் அல்டாய் மாகாணத்திற்கு உள்பட்ட குல்பொகொய் பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. இதற்கிடையில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் குழந்தைகள் உள்பட 6 பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்த குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால், இந்த தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த குடியிருப்புக்குள் அடைத்து வைக்கப்பட்டு மர்ம நபர்களால் கொடுமைபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X