என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேட்டி, சேலையில் வந்து நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி தம்பதியர்
Byமாலை மலர்11 Dec 2019 3:52 PM GMT (Updated: 11 Dec 2019 3:52 PM GMT)
ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்து அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர்.
ஓஸ்லோ:
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்த பொருளியல் நிபுணர்களான கொல்கத்தா நகரை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் விருது வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஒஸ்லோ-வில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலையில் வந்து நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X