என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியட்நாம் - உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி
Byமாலை மலர்8 Dec 2019 2:03 AM GMT (Updated: 8 Dec 2019 2:03 AM GMT)
வியட்நாமில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஹனோய்:
வியட்நாம் நாட்டில் வின்புக் மாகாணத்தில் பல மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு உணவு விடுதி செயல்பட்டு வந்தது.
அந்த உணவு விடுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ உணவு விடுதியின் தளத்தில் மளமளவென பரவியது. அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்து ஓட்டம் எடுத்தனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உடக் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
வியட்நாமில் இந்த ஆண்டு மட்டுமே இதுவரை 3,454 கியாஸ் சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீ விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 88 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X